நாம் தமிழர் கட்சியின் துறைமுகம் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், முன்பு அறிவித்த வேட்பாளர்களை மாற்றி, துறைமுகம் தொகுதியில் அகமது பாசில் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வைகுண்டமாரி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.