தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மகாராஷ்டிரத்தில் மார்ச் 28 முதல் இரவுநேர பொதுமுடக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மார்ச் 28ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் மார்ச் 28 முதல் இரவுநேர பொதுமுடக்கம்
Updated On :26 மார்ச் 2021, 2:41 pm

ANI

மகாராஷ்டிர மாநிலத்தில் மார்ச் 28ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

மார்ச் 28 இரவு முதல் மகாராஷ்டிரத்தில் இரவுநேர பொதுமுடக்கம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தனி உத்தரவு விரைவில் பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறையால் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.