புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீடு திரும்பினார்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.  
என்.ரங்கசாமி
என்.ரங்கசாமி
Published on
Updated on
1 min read


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.  

கடந்த 7-ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்ற நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே.9)  கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த முதல்வர் ரங்கசாமி சனிக்கிழமை வீடு திரும்பினார். வீடு திரும்பி உள்ள முதல்வர் ரங்கசாமி ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com