யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவிலிருந்து 30 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய ரயில் தமிழகம் வந்தது!

ஒடிசாவிலிருந்து 30 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய ரயில் தமிழகம் வந்தடைந்தது.

News image
ஒடிசா மாநிலம் ரூர்கோலாவில் இருந்து சனிக்கிழமை காலை திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த 2 டேங்கரில் தலா 15 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய விரைவு ரயில். 
Updated On :15 மே 2021, 6:38 am

DIN

திருவள்ளூர்: ஒடிசாவிலிருந்து 30 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய ரயில் தமிழகம் வந்தடைந்தது.

தமிழகத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கோலாவில் இருந்து 2 டேங்கரில் தலா 15 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலையில் வந்து சேர்ந்தது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் தொற்றால் பாதிப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுகிறது. 

தற்போது ஆக்ஸிஜன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டாலும், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜன் தேவைக்காக கேரளம் மாநிலத்திலிருந்து வந்தது. தற்போது கேரளத்திலும் கரோனா பாதிப்பு அதிகம் என்பதால், அங்கிருந்து வந்த ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கோலாவிலிருந்து அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன்பேரில் தனியார் நிறுவனம் சார்பில் 2 டேங்கர்களை தெற்கு ரயில்வே உதவியுடன்  திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆக்சிஜன் விரைவு ரயில் இருமுறையாக 5 டேங்கர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது ஒடிசா மாநிலம் ரூர்கோலாவில் இருந்து தலா 15 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய 2 டேங்கர்கள் விரைவு ரயில்கள் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலையில் வந்து சேர்ந்தது.

இதில் 15 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய டேங்கர் லாரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து மற்றொரு டேங்கர் லாரி சென்னை விமான நிலையம் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல், இனிமேல் கொண்டு வரப்படும் ஆக்ஸிஜன் நிரப்பிய டேங்கர் லாரி மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் நிரப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.