கரோனா நிதியாக ரூ. 1 கோடி வழங்கியது அதிமுக

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 1 கோடி இன்று வழங்கப்பட்டது. 
கரோனா நிதியாக ரூ. 1 கோடி வழங்கியது அதிமுக
Published on
Updated on
1 min read

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 1 கோடி இன்று வழங்கப்பட்டது. 

கரோனா நிவாரண நிதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பிற்பகல் வழங்கினார்.

இதுகுறித்து நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்,

கரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com