சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஊரடங்கு மீறல்: சென்னையில் ஒரே நாளில் 5,428 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 மே 2021, 8:43 am

DIN

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மே 24ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி சென்னையில் பலர் வெளியே சுற்றி வருவதாக தொடர்ந்து புகார் எழுந்ததையடுத்து திங்கள்கிழமை முதல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

சென்னையில் நேற்று ஒரே நாளில் கரோனா விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 3,422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 9.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

 கரோனா விதிமுறைகள் மீறி செயல்பட்ட 75 கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.