கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.


கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஊரடங்கு உத்தரவை மே 9 முதல் மே 31 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 1 வரை ஊடரங்கு நீட்டித்து, மாநிலத்தில் உள்ள விதிமுறைகள் அவ்வாறே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் மருத்துவக் கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...