எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 மே 2021, 9:38 am

DIN

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஊரடங்கு உத்தரவை மே 9 முதல் மே 31 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 1 வரை ஊடரங்கு நீட்டித்து, மாநிலத்தில் உள்ள விதிமுறைகள் அவ்வாறே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1  மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் மருத்துவக் கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.