தவழ்ந்து வந்து வாக்களித்த பெண்மணி!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் தவழ்ந்து சென்று வாக்களித்தது, வாக்காளர்களை வருத்தமடைய செய்தது.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் தவழ்ந்து சென்று வாக்களித்தது, வாக்காளர்களை வருத்தமடைய செய்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 18-வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் டேவிட் ஆரம்பபள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் காலையில் இருந்து விருவிருப்பாக வாக்குபதிவு நடைபெற்று வந்தது. வேல்மணி (35) என்ற மாற்றுத்திறனாளி பெண் வாக்களிக்க வந்துள்ளார். வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி வசதி இருந்தும், அதனை எடுத்து உதவி செய்ய தேர்தல் அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை.
மேலும் நகராட்சி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் அப்பெண் தவழ்ந்து சென்று, தனது ஜனநாயக கடமையையாற்றியது, அப்பகுதி மக்களை நெகிழச்செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...