திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி-1, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய 6 நகராட்சிகள், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருமழிசை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, நாராவாரிகுப்பம், மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மொத்தம் 318 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை தவிர்த்து மீதமுள்ள 815 வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 1797 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இதையடுத்து மாலை 5 முதல் 6 மணி வரையில் கரோனா நோய் தொற்றால் பாதித்தோர் வாக்களிக்கவும் இருக்கின்றனர்.