மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரி: புதுவை அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

புதுவையில் புதன்கிழமை காலை தொடங்கிய புதுச்சேரி பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏக்கள், புதுவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா, மின்துறை தனியார்மயம் உள்ளிட்ட பிரச்னைகள்

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 5:18 am

DIN

புதுவையில் புதன்கிழமை காலை தொடங்கிய புதுச்சேரி பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏக்கள், புதுவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா, மின்துறை தனியார்மயம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்துவதற்கு, பேரவையை 7 நாட்கள் நடத்த வேண்டுமென வலியுறுத்தி எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில், திமுக உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியாகராஜன் உள்ளிட்டோர் சட்டப்பேரவைத் தலைவரை நோக்கி, குரலெழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, செயல்படாத புதுவை அரசை கண்டித்தும், சட்டப்பேரவை கூட்டத்தை ஒரு வார காலம் நடத்த அனுமதிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு பதவியேற்று 8 மாதங்கள் ஆகியும் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. மழை நிவாரணம், விவசாயிகளுக்கு நிவாரணம், தீபாவளி, பொங்கல் பரிசு பொருட்கள், தற்கால ஊழியர்களுக்கான பத்தாயிரம் சம்பளம் உயர்வு உள்ளிட்ட எதையும் செயல்படுத்தாமல் முடங்கியுள்ளது.

பிரதமர் குறிப்பிட்ட பெஸ்ட் புதுச்சேரி திட்டத்தை நிறைவேற்றவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை சொன்னதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. மூடப்பட்ட அரசு சார்பு நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. மின் துறை தனியார்மயம் குறித்து வெளிப்படையான தகவல் இல்லை. அனைத்து விதத்திலும், இந்த அரசு செயல்படாத அரசாக உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையிலான எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் இரங்கல் குறிப்புடன், விவாதங்கள் ஏதுமின்றி 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.