புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சேலம் அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல்

சேலம் மாவட்டம்  கொளத்தூரில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 11:24 am IST

சேலம் மாவட்டம்  கொளத்தூரில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொளத்தூரில் பருத்தி ஏலம் நடைபெறும். கொளத்தூர் ஒன்றியம் முழுவதிலும் இருந்தும் கர்நாடக மாநிலம் கோபி, நத்தம் பகுதியில் இருந்தும் தர்மபுரி மாவட்டம் நாகமரை, நெருப்பு, ஏரியூர், பென்னாகரம் பகுதிகளிலிருந்தும் கொளத்தூருக்கு பருத்தி வரும். 

கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூ.95 வரை ஏலம் போன நிலையில் இன்று கிலோ ரூ.85-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் மற்றும் வேளாண் விற்பனை அதிகாரிகள் கைகோர்த்துக் கொண்டு பருத்திக்கு மிகக் குறைந்த விலையை நிர்ணயம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். . 

இடைத்தரகர்களுடன் கைகோர்த்துக் கொண்ட வேளாண் விற்பனை நிலைய அதிகாரிகளை கண்டித்தும் உரிய விலையை நிர்ணயிக்க கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உரிய விலை நிர்ணயிக்க அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.