சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!

சௌதி அரேபியாவின் ஜிசான் நகரத்தின் மீது யேமனின் ஹௌதி படைகள் தாக்குதல்...

News image

ஹௌதிகள் தாக்குதல்... - கோப்புப் படம்

Updated On :59 வினாடிகள் முன்பு

சௌதி அரேபியாவின் ஜிசான் நகரத்தின் மீது யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவுக்கும் யேமனின் ஹௌதி படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ஜிசான் நகரத்தில் உள்ள அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இன்று (ஆக. 13) ஹௌதிகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, யேமன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சௌதி அரேபியாவின் மிகப் பெரிய உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அரம்கோவின் மீது 2 ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சௌதி அரசு இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இத்துடன், யேமனின் வான்வழிப் பாதையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்கும், சதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்களில் இறையாண்மையை மீறியதற்காகவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக சௌதி அரேபியாவின் கப்பல்கள் பயணிப்பதற்கு ஹௌதிகள் தடை விதித்துள்ளனர்.

ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சௌதி மீது ஹௌதிகள் தடை விதித்துள்ளதால் இருதரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that Yemen's Houthi rebels have launched a drone attack on the Saudi Arabian city of Jizan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.