புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் ஈரான்! டிரம்ப்பின் பெருமிதங்களுக்கு பதிலடி!

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்கு அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போட்டி குறித்து...

hormuz strait

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் காத்திருக்கும் கப்பல் - கோப்புப் படம் | AP

Published On :

ஹோர்முஸ் நீரிணை ஈரானிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, ஈரானின் ராணுவத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணை மீதான உரிமை யாருக்கானது என இருதரப்புக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய அரசு கட்டுப்படுத்தி வரும் நிலையில், போரால் அந்தப் பாதையை ஈரானிய படைகள் முற்றிலுமாக முடக்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த புதன்கிழமை (ஆக. 12) அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில்,

“ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை நாம் தொடர்ந்து தக்கவைப்போம் என நான் கருதுகிறேன். எங்களின் கடற்படை முற்றுகையை அனைவரும் வால் ஆஃப் ஸ்டீஸ் என அழைக்கின்றனர். இதில், ஈரானால் எதுவும் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் பெருமிதங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் முக்கிய அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டை உறுதி செய்து வருகின்றனர்.

இதுபற்றி, ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய துணை ராணுவப் படையின் தளபதி ஹுசைன் தயீப் இன்று கூறுகையில்,

“இன்று, ஹோர்முஸ் நீரிணை ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதையும், நமது நாடு முழுமையான பாதுகாப்போடு தனது பாதையில் தொடர்ந்து பயணிப்பதையும் நீங்கள் காணலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், இந்தப் போரில், ஈரானின் முக்கிய தலைவராக அறியப்படும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, உளவுத்துறையின் தோல்வியால் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து தவறான கணக்கீடுகளைச் செய்து வருவதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian military leaders and key officials continue to assert that the Strait of Hormuz is under the control of the Iranian government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.