இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம்: ஈரான் உறுதி!

போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு உள்பட ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் தெரிவித்துள்ளது.

News image

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 6:41 pm IST

போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு உள்பட ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது முதலே, உலகின் முக்கிய எரிபொருள் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.

மேலும், ஹோர்முஸ் நீரிணையை அனுமதியின்றி கடக்க முயன்ற கப்பல்கள் மீது தாக்குதல்களையும் ஈரான் நடத்தியது. அதேநேரம், வரும் காலங்களில் ஹோர்முஸை கடக்கும் கப்பல்களிடமிருந்து வரி வசூலிக்கவும் ஈரான் முடிவு செய்துள்ளது.

போரை நிறுத்தி இரு தரப்பினரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியதால் ஈரான் ஹோர்முஸ் மீதான பிடியை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், ஹோர்முஸ் தொடர்பாக ஓமனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஆனால், ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்கா ஜூன் மாத ஒப்பந்தத்தை மீறியதற்கான இழப்பீடு வழங்குவது மற்றும் பிற நிபந்தனைகளுக்கு உட்படுவதைப் பொறுத்து அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை மறுத்த அவர், அவர்கள் இடைத்தரகர்கள் வழியே செய்திகளைப் பரிமாறிக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி முகமது பாகர் சுல்காதர் கூறுகையில், ஹோர்முஸை மீண்டும் திறப்பதற்கான கோரிக்கைகளில், ‘லெபனான், பாலஸ்தீனம், ஏமன், ஈராக் போன்ற ஈரானின் நட்பு நாடுகளில் போர் நடவடிக்கைகளுக்கு முடுவு கட்டுவதும் அடங்கும்’ எனக் கூறினார்.

"எங்கள் நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையை மூடப்படும். இது வெறும் நீர்வழிப் பாதை மட்டுமல்ல, உண்மையில் இது ஒரு போர்க்களம்” என்று ஈரான் புரட்சிகரக் காவல் படையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

We will not open the Strait of Hormuz until conditions are met: Iran asserts!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.