ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலூர் மாநகராட்சி மேயராகிறார் முதுநிலை ஆசிரிய பட்டதாரி!

வேலூர் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 31-ஆவது மாமன்ற உறுப்பினர் சுஜாதா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
31-ஆவது மாமன்ற உறுப்பினர் சுஜாதா ஆனந்தகுமார் எம்ஏ., பி.எட்.,
Updated On :3 மார்ச் 2022, 9:49 am

DIN

வேலூர்: வேலூர் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 31-ஆவது மாமன்ற உறுப்பினர் சுஜாதா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். முதுநிலை ஆசிரிய பட்டதாரியான இவர், ஆசிரியர் பணிக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்க உள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் வெற்றி பெற்றவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன்தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு மேயர், துணைமேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலில் திமுக 44 வார்டுகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து மேயர், துணைமேயர், நான்கு மண்டலக் குழு தலைவர் பதவிகள், அனைத்து நிலைக்குழு பொறுப்புகள் ஒட்டுமொத்தமாக திமுகவின் கைகளுக்குச் சென்றுள்ளன.

இதையடுத்து, வேலூர் மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு 31-ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள சுஜாதா ஆனந்தகுமார்,  துணைமேயர் பொறுப்புக்கு 8-ஆவது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.சுனில்குமார் ஆகியோர் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாநகராட்சி மேயராக பொறுப்பேற்க உள்ள சுஜாதா ஆனந்தகுமார்(37) எம்ஏ., பி.எட்., படித்துள்ள முதுநிலை ஆசிரிய பட்டதாரியாவார். கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த இவர் ஆசிரியப் பணிக்காக போட்டித் தேர்வுகளை எழுதி வந்தவர். இவர், 2011-இல் திமுகவில் இணைந்து 2016 முதல் மாநகர மகளிரணி அமைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது கணவர் ஆனந்தகுமார் 1991-இல் திமுகவில் இணைந்து கிளைச்செயலர், வார்டு பிரதிநிதி என பொறுப்புகளை கடந்து தற்போது தொமுச மாவட்ட டாஸ்மாக் அமைப்பாளராக உள்ளார். இவர் ஏற்கனவே 1996-2001 வரை கொணவட்டம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2011-இல் நடந்த மாநகராட்சித் தேர்தலில் சுஜாதா ஆனந்தகுமார் முதன்முறையாக திமுக சார்பில் 56-ஆவது வார்டில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது இரண்டாவது முறையாக 31-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் மேயராகவும் பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு சுகேஷ்சஸ்வதன் (பிளஸ் 1), நிகேஷ் சாஸ்வதன் (7ஆம் வகுப்பு) என இரு மகன்கள் உள்ளனர்.

துணைமேயராக பொறுப்பேற்க உள்ள எம்.சுனில்குமார்(46), 1996-இல் திமுகவில் இணைந்து மாவட்ட பிரதிநிதி, மாநகர துணைஅமைப்பாளர் என பல பொறுப்புகளை கடந்து தற்போது பகுதிசெயலராக உள்ளார். ஏற்னவே, 2001-இல் தாராபடவேடு பேரூராட்சி வார்டு உறுப்பினராகவும், 2006-இல் நகராட்சி உறுப்பினராகவும், 2011-இல் மாநகராட்சி முதலாவது மண்டல தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கட்டுமான ஒப்பந்தப்பணி, கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.