காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுப்பொலிவு பெறுகின்றன மாநகராட்சி பூங்காக்கள்

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களுக்கு மனநிறைவு, மகிழ்ச்சியைத் தரும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஏப்ரல் 2023, 1:29 am

DIN

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களுக்கு மனநிறைவு, மகிழ்ச்சியைத் தரும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் மரக் கன்றுகள் மற்றும் செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பூங்காவிலும் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், மரம் மற்றும் சுவா்களில் வண்ணம் பூசுதல், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல், பொதுமக்களுக்கான இருக்கை அமைத்தல், பழுதான இருக்கைகளை சீரமைத்தல், நடைபாதை அமைத்தல், அனைத்து மின் விளக்குகளையும் ஒளிரச்செய்தல், செயற்கை நீரூற்று மற்றும் அருவி ஆகியவற்றுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.

பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியும் பெறும் வகையில் மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள் பசுமையாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு சிறந்த இடமாக மாற்றப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.