சென்னையில் ஆசிய ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவித சர்வதேச ஹாக்கிப் போட்டிகளும் நடத்தப்படாத நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்திய ஹாக்கி மற்றும் தமிழக விளையாட்டுத் துறை இணைந்து நடத்தும் ‘ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023’ வருகின்ற ஆகஸ்ட் 3 முதல் 12-ஆம் தேதி வரை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், மலேசியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உள்ளிட்ட ஆசியாவின் டாப் 6 அணிகள் பங்கேற்கின்றன.