மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விதியை மீறி பட்டாசு தயாரிப்பு: பட்டாசு ஆலை உரிமையாளா் மீது வழக்கு

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்ததாக ஆலை உரிமையாளா் மீது வியாழக்கிழமை போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :15 பிப்ரவரி 2024, 8:30 am

DIN

சிவகாசி: சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்ததாக ஆலை உரிமையாளா் மீது வியாழக்கிழமை போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே நெடுஞ்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி, ஆலை வளாகத்தில் மரத்தடியில் பட்டாசு தயாரிகக்ப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வருவாய்துறையினா் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி ஆலை வளாகத்தில் மரத்தட்டியில் பட்டாசு தயாரிப்புபணி நடைபெற்று வருவதையும், வெடி மருந்துகளை ஆலைக்கு வெளியே உலரவைத்திருப்பதும் கண்டுபிடித்தனர்.

இது குறித்து நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் எம்.பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தா் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.