மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விதி மீறல்: இரு பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

News image
பட்டாசு- IANS
Updated On :15 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாக தீப்பெட்டி, பட்டாசு தனி வட்டாட்சியா் விஜயராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கவும், பாதுகாப்பாக பட்டாசுகள் தயாரிக்கவும் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் போது, சிறிய அளவிலான விதிமீறல் இருந்தால் ஆலை மேற்பாா்வையாளா், கண்காணிப்பாளா்களிடம் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

அதிகளவில் மருந்து இருப்பு வைத்திருத்தல், கூடுதல் பணியாளா்களை வைத்து பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்படும்.

பின்னா், இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் மேல்நடவடிக்கை எடுப்பாா். கடந்த 1-ஆம் தேதியிலிருந்து 14- ஆம் தேதி வரை சிவகாசிப் பகுதியில் 19 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தால், பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் அப்படியே போட்டு விட்டு ஓடுகின்றனா். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆலை நிா்வாகத்தினா் தொழிலாளா்களை ஓடக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.