அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

61 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்: மீன்கள் விலை குறையுமா?

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து 61 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை (ஜூன் 15) விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றிருப்பதால் மீன்கள் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

News image
மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து 61 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குச் செல்லும் மீனவர்கள்.
Updated On :15 ஜூன் 2024, 4:40 am

DIN

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து 61 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை (ஜூன் 15) விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றிருப்பதால் மீன்கள் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிகழாண்டு மீன்பிடித் தடைக்காலத்தில், விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நாள்களில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனா்.

இந்த காலகட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும்.

இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைந்தது; சனிக்கிழமை (ஜூன் 15) அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.

மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு செல்வதால் அதிகயளவில் மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் மீன் சந்தைகளில் மீன்களின் வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படும். மீன்களின் விலையும் கணிசமாக குறைந்து காணப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.