முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இது ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல்: யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ”தில்லியை ஆட்சி செய்யப்போவது ஒரு ராமபக்தர் தான்” என்று கூறியுள்ளார்.

News image

யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

Updated On :29 மே 2024, 1:38 pm IST

உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் ”தில்லியை ஆட்சி செய்யப்போவது ஒரு ராமபக்தர் தான்” என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத், ”2024 மக்களவைத் தேர்தல் ராமரின் பக்தர்களுக்கும், துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல்; தில்லியை ஒரு ராமபக்தர் மட்டுமே ஆட்சி செய்வார். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் குணாதிசயம் ராமருக்கு எதிரானது. வீர் பகதூர் சிங் ராமரின் பக்தர் என்பதால், காங்கிரஸ் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது: ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கக் கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது. சமாஜ்வாதி கட்சியும் ராமர் கோயில் சரியாக கட்டப்படவில்லை என்று கூறுகிறது. ராமர் கோயில் இந்தியாவின் நம்பிக்கையின் அடையாளமாகும். எனவே, இந்தத் தேர்தல் ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தலாக அமைந்துள்ளது" என்று கூறினார்.

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் பிரசாரத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரின் கோயில்களில் தரிசனம் செய்துவருகிறார். இன்று (மே 29) கோரக்பூர் கோயிலுக்கு சென்ற யோகி ஆதித்யநாத் குழந்தைகளை சந்தித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டதுடன், அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.