தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது!

ரத்த சேகரிப்பாளர்களுக்கு இந்தப் புதிய கேள்விகள் நிறைந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்ததானம் வழங்க ஆர்வத்துடன் முன்வருபவர்களிடம் கேட்டுப் பெறுவது சற்று சிரமமான காரியம் தான்.

News image
Updated On :22 ஜூலை 2025, 4:01 pm IST

மும்பையில் உள்ள ரத்த வங்கிகளுக்கு தேசிய இரத்தப் பரிமாற்ற கவுன்சில் புதிதாக ஒரு சர்க்குலர் அனுப்பியிருப்பதாகத் தகவல். வரும் அக்டோபர் மாதம் முதல் தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. திருத்தங்களில் முக்கியமானது, இனிவரும் காலங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், பெண் பாலியல்க் தொழிலாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் உள்ளிட்டோரால் எச்.ஐ.வி மற்றும் ஹெபாட்டிடிஸ் B மற்றும் C    நோய்த்தொற்று ஏற்பட அதிகபட்ச காரணங்கள் இருப்பதால் மேற்கண்டோரிடம் இருந்து ரத்ததானம் பெறவே கூடாது. அவர்கள் தங்களது ரத்தத்தை யாருக்கும் தானமாக வழங்கக் கூடாது. என்று அந்தப் பிரிவினரை ஒட்டுமொத்தமாக விலக்க வலியுறுத்துகிறதாம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்.

இந்தத் தடையானது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு தனி நபரும் நாள்பட்ட நோய்த்தொற்றில் இருந்தாலும், கேன்சர், உடலுறுப்பு செயலிழப்பு, ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உட்பட்டவராக இருந்தாலும் அத்தகையோரிடம் இருந்தும் ரத்த தானம் பெறத் தடை விதிக்கின்றன புதிய நெறிமுறைகள்.
 
மருத்துவமனைகளில் ரத்த தானம் பெறுவது மற்றும் அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி பேசுகையில் ரத்த வங்கிகளில் பணிபுரிவோர் தெரிவித்தது என்னவெனில், வளர்ந்த நாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் இப்படியோர் திருத்தத்தை வடிவமைத்திருப்பதாகவும், முந்தைய நெறிமுறைகளில் மேம்போக்காக மட்டுமே மலேரியா, எச். ஐ வி, எய்ட்ஸ் , மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கக் கூடாது என்று சில நிபந்தனைகள் இருந்ததாகவும் தற்போது மேலும் சில நிபந்தனைகளைச் சேர்த்து காலம் தோறும் மாறி வரும் மக்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ரத்த சேகரிப்பாளர்களுக்கு இந்தப் புதிய கேள்விகள் நிறைந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்ததானம் வழங்க ஆர்வத்துடன் முன்வருபவர்களிடம் கேட்டுப் பெறுவது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், இந்தக் கேள்விகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே ரத்ததானம் வழங்க வரும் கொடையாளர்களிடம், அவர்களது பாலியல் தேர்வு மற்றும் விருப்பங்களைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டியதாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இந்தக் கேள்விகளை சம்மந்தப் பட்ட மக்கள் எளிதாக எதிர்கொள்கிறார்கள். இந்தியாவிலும் காலப்போக்கில் அது சாத்தியப்படலாம் என்கிறார் ரத்தப் பரிமாற்ற அலுவலர் ஒருவர்.

ரத்த வங்கி நடத்தும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவர் இதைப்பற்றிப் பேசும் போது தெரிவித்தது என்னவென்றால், ‘இப்படியான நெறிமுறைகள் புகுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் விஷயத்தில் வழங்கிய தீர்ப்பு காரணம் அல்ல. அது சட்ட ரீதியானது. ஆனால், ரத்ததானத்தைப் பொருத்தவரை... இது நடத்தை மாற்றங்களுடன் தொடர்புடையது. ரத்தப் பரிமாற்றத்தின் முக்கிய நோக்கம், தேவை இருக்கும் நோயாளிகளின் வாழ்வை நோயற்று ஆரோக்யமானவராக மாற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மேலும் நோயில் தள்ளுவதாக இருக்கக் கூடாது என்பதே! எனவே மேற்கண்ட புதிய ரத்தப் பரிமாற்ற நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ - என்றார்.

Related Article

விபத்தில் இறந்தவர் கணவர் என்று அறியாது முதலுதவி அளித்த செவிலியின் துயரம்!

சோபியாவுக்கு தீவிரவாத ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகவை விமர்சிப்பவர்களுக்கான பகிரங்க அச்சுறுத்தல்!

மக்கள் பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்தார்கள், இன்று நதிகள் அதை விட ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமிக்கின்றன!

ட்விட்டராட்டிகளை உருக வைத்து இணைய வைரலாகிக் கொண்டிருக்கும் ‘தந்தையின் ரிப்போர்ட் கார்டு’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.