இந்த வட்டி விகித உயர்வானது, ஏற்கனவே கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், இரும்புக் கம்பிகள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவற்றுடன் இணைந்து பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும். அண்மையில், இவையெல்லாம் சேர்ந்துதான் சொத்துக்களின் மதிப்பை கடுமையாக உயர்த்தியது. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டியும், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வும் இணைந்து சொத்து மதிப்பை அதிகரித்து, அது குடியிருப்புகளின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 2022ஆம் ஆண்டு, குடியிருப்புகளின் விற்பனை ஓரளவுக்கு சுமூகமான நிலையில் இருந்தது. எங்களது நிறுவனத்தின் ஆய்வின்படி, கிட்டத்தட்ட 1.85 லட்சம் குடியிருப்புகள் நாட்டின் முக்கியமான 7 நகரங்களில் 2022ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்கிறார்.