சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2014 முதல் 2018 க்கு இடையில் அடிப்படைவசதிகள் அற்ற குடிசைப்பகுதிகள் 91% அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தக் காலக்கட்டத்தில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் 378 ஆக இருந்த குடிசைப் பகுதிகள் 616 ஆக அதிரித்திருப்பதாகவும், இது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 62.9 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி: காசாக்கப்படும் வெறுப்பு அரசியல்?
அதிகரித்திருக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 65.95% அதிகரித்து, அதே காலகட்டத்தில் 77,671 இல் இருந்து 1,28,893 குடும்பங்களாக அதிகரித்துள்ளது. 91.9 சதவீதத்துடன், மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் மிக அதிகமான குடிசைப்பகுதிகள் அதிகரித்துள்ளன.
பொதுவாக குடியிருக்கக்கூடிய குடிசைப்பகுதிகள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கு ஏற்ற ஆட்சேபனையற்ற நிலங்களில் அமைந்திருக்கும். ஆனால், ஏற்றுக்கொள்ள முடியாத குடிசைப் பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டவை, ஆரோக்கியமற்ற சூழலில் அமைந்திருக்கும், மற்றும் அங்கு மக்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2016 முதல் 2022 வரை மாநில அரசு, 44 குடிசைப் பகுதிகளை அகற்றி, அப்பகுதிகளில் மீண்டும் ஆக்ரமிப்புகள் நடைபெறாதவண்ணம் தடுக்க தடுப்பு வேலிகளை அமைத்திருந்தது. அதேநேரத்தில் 2005 முதல் 2021ஆம் ஆண்டு முதல் வேளச்சேரியின் சதுப்பு நிலப்பகுதிகளில் ஏராளமான நிலப்பரப்புகள் ஆக்ரமிக்கப்பட்டு குடிசைகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறின. கோவிலம்பாக்கம் ஏரிப் பகுதியிலும் 2002ஆம் ஆண்டு முதல் ஆக்ரமிப்புகள் நடந்தேறிவருகின்றன.
2015ஆம் ஆண்டு முதல், ஏறக்குறைய 85 'ஆட்சேபனைக்குரிய' குடிசைப்பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன, எனவே 'அனுமதிக்க முடியாத' குடிசைப்பகுதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். இந்த செயல்திட்டமானது, தமிழ்நாடு பகுதிகள் (மேம்பாடு மற்றும் அனுமதி) சட்டம், 1971ன் படி குடிசைப்பகுதிகளின் எண்ணிக்கை 'அறிவிப்பு' நிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இவை, மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஆட்சேபனைக்குரியது' அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதது' போன்ற அண்மையில் உருவான வரையறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படவில்லை என்பதுவும் இதற்குக் காரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று ஜொ்மனி பயணம்
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

கருவேல மரங்களை வெட்டிக் கடத்திய 15 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


