100 ரூ நோட்டை கண்ணில் காட்டினால் தான் சம்பா பயிறில் களை எடுப்போம்: சாமர்த்திய மிரட்டல்!

விவசாயக் கூலிகள் 100 ரூபாய் நோட்டை கண்ணில் காட்டினால் தான் வயலில் இறங்கி களை பறிக்க முடியும்
100 ரூ நோட்டை கண்ணில் காட்டினால் தான் சம்பா பயிறில் களை எடுப்போம்: சாமர்த்திய மிரட்டல்!
Updated on
1 min read

டெல்ட்டா பகுதிகளில் இப்போது சம்பா நெல்லில் கலைபறிக்கும் பருவம், இந்த நேரத்தில் 500, 100 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட செய்தி பரவியது யாருக்கு நல்லதோ? இல்லையோ? தஞ்சைப் பகுதி விவசாயக் கூலிகளுக்கு சற்று நன்மையில் முடிந்திருக்கும் போல் தெரிகிறது. அங்கிருக்கும் விவசாயக் கூலிகள் 100 ரூபாய் நோட்டை கண்ணில் காட்டினால் தான் வயலில் இறங்கி களை பறிக்க முடியும் என  வேலைக்காகத் தங்களை அணுகும் நிலச்சுவான்தார்களை சாமர்த்தியமாக மிரட்டுகிறார்களாம். இதனால் டெல்ட்டா விவசாயிகளுக்கு விவசாயக் கூலிகள் கிடைப்பதில் பஞ்சமாகி விட்டது. சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது மனித சுபாவம், பனம் படைத்த விவசாயிகள் எப்படியோ இந்த நிலையைச் சமாளித்து மீண்டு விடுவார்கள், ஆனால் கடந்த மூன்று நாட்களாக விவசாயக் கூலிகள் கிடைக்காமல் அல்லாடும் சாமனிய விவசாயிகளின் நிலை தான் அந்தோ பரிதாபம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com