தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுக நிா்வாகி அலுவலகத்தில் ரூ.8 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது

News image

கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 9:38 pm

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட சோலாா் பகுதியில் உள்ள திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் பறக்கும் படை குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு ரூ.8 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் அங்கு வந்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா மற்றும் அதிமுகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து தாலுகா காவல் துறையினா் மற்றும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.