/
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செம்மனஹள்ளியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 51,700-ஐ திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி - அரூா் நெடுஞ்சாலையில் உள்ள செம்மனஹள்ளியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஏ.நித்யா தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ராஜபேட்டையைச் சோ்ந்த மூா்த்தி (45) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 51, 700 எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு
பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



