6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனி கோவில் யானை கஸ்தூரி குளிக்க புதிய நீச்சல் குளம்!

பழனி முருகன் கோவில் யானையின் பெயர் கஸ்துாரி. இந்த யானை குளிப்பதற்கு தற்போது

News image
Updated On :8 அக்டோபர் 2017, 12:10 pm

DIN

பழனி முருகன் கோவில் யானையின் பெயர் கஸ்துாரி. இந்த யானை குளிப்பதற்கு தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் புதிய நீச்சல் குளமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கஸ்தூரிக்கு 48 வயதாகிறது. எட்டு வயது முதல் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட கோவிலின் முக்கிய விழாக்களில் பங்கேற்று வரும் கஸ்தூரியை பக்தர்களால் நேசிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கஸ்தூரி குளிப்பதற்காக கோவில் வளாகத்திலேயே ஒரு 'ஷவர் பாத்' போன்ற அமைப்பு உள்ளது. தற்போது இந்த யானை குளிப்பதற்காக காரமடை தோட்டத்தில், இயற்கையான சூழ்நிலையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. யானை நன்றாக முங்கி குளிக்க வசதியாக இந்தப் புதிய நீச்சல் குளம் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இந்த நீச்சல்குளப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் கஸ்தூரியின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.