சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள சிவாஜி கணேசன் சிலை இன்று அதிகாலை அகற்றப்பட்டது.
மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சிலையை அகற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அகற்றப்படும் சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் அகற்றப்படும் சிலையை மணிமண்டபத்தில் வைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் சிலையை தற்போதைய இடத்தில் இருந்து அகற்றி அதே சாலையிலேயே கடற்கரை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை மணி மண்டபத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







