மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி! 8 ஜிபி டேட்டா இலவசம்!

டிஜிட்டல் உலக ஜீவிகளாக மாறிவிட்ட பலருக்கு ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் சலுகைகளைப் போல

Published On :

டிஜிட்டல் உலக ஜீவிகளாக மாறிவிட்ட பலருக்கு ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் சலுகைகளைப் போல வேறெந்த நிறுவனமும் அளித்ததில்லை எனலாம். அந்தளவுக்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கும் ஜியோ நிறுவனம் தற்போது 8-ஜிபி டேட்டா இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

Story image

ஐபிஎல் போட்டிகள் துவங்கியதும், ஜியோ நிறுவனம் இந்தப் புதிய சலுகைகளை அறிவிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக ரூ. 251 ரீசார்ஜ் திட்டத்தில்  தினமும் 4ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 51 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில் தினமும் 4-ஜிபி டேட்டா வழங்கப்படும் என்ற செய்தி வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. மேலும் ரூ. 251 திட்டத்தில் கிரிக்கெட் டீஸர் என்னும் திட்டத்தை அறிவித்து அதில் கூடுதலாக 8-ஜிபி  டேட்டாவை வழங்கியது.

Story image

இதற்கெல்லாம் டாப்பாக தற்போதும் மீண்டும் ஒரு புதிய ஆஃபரை ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி, ரூ. 101 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதலாக 8-ஜிபி டேட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது, நாளுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மே 25 முதல் மே 29 வரை 5 நாட்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோவின் மற்றொரு அறிவிப்பு என்னவென்றால் Add on Offer சலுகையொன்றினை தமது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அதன்படி வாடிக்கையாள்ரகள் பேசவோ அல்லது மெசேஜ் அனுப்பவோ முடியாது, ஆனால் டேட்டாவை பயன்படித்தி விடியோ மற்றும் இணைய சேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.