நீதிமன்ற உத்தரவை ஏற்று கொச்சி மராடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியேறத் தொடங்கினர்!

மக்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டபோதும், ‘அரசாங்கம் ஒரு ரியல் எஸ்டேட் தரகராக செயல்படக்கூடாது, ஆனால் வீடுகளை இழந்த அடுக்குமாடி உரிமையாளர்களை ஆதரிப்பதற்கான ஒரு வசதியாளராக இருக்க வேண்டும்’
kochi marasu housing
kochi marasu housing
Published on
Updated on
2 min read

கேரள மாநிலம், கொச்சி மராடு பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 20 மாடிகள் கொண்ட இவை அனைத்துமே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நான்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடிக்கும்படி  கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, 4 குடியிருப்புகளையும் இடிக்கும் நடவடிக்கையை கேரள அரசு தொடங்கியது.  நேற்றுமுன்தினம், இவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து கொடுக்கும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டது. கூடுதல் அவகாசம் கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டு தற்போது அங்கு மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது வீடுகளைக் காலி செய்ய ஆகும் செலவினங்களை ஈடுசெய்வதற்காக குடியிருப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தை அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். தங்களை மறுகுடியேற்றம் செய்வதற்காக அரசால் அடையாளம் காணப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகையை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் குடியிருப்புவாசிகள் விரும்பினர். மக்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டபோதும், ‘அரசாங்கம் ஒரு ரியல் எஸ்டேட் தரகராக செயல்படக்கூடாது, ஆனால் வீடுகளை இழந்த அடுக்குமாடி உரிமையாளர்களை ஆதரிப்பதற்கான ஒரு வசதியாளராக இருக்க வேண்டும்’

- என்று அதிரடி கவுன்சிலின் கன்வீனரான சம்சுதீன் கருணாகப்பள்ளி கூறினார்.

மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ் மற்றும் சப் கலெக்டர் சினேகில் குமார் சிங் ஆகியோருடன் நடந்த சந்திப்பில் அடுக்குமாடி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகளை எழுப்பினர். மாவட்ட காவல்துறைத் தலைவர் (கொச்சி நகரம்) விஜய் சக்ரே கலந்து கொண்டார்.

இருப்பினும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும், பொருட்களை மாற்றுவதற்கும் குடியிருப்புகள் வாடகைக்கு எடுப்பதற்கும் செலவுகளை குடியிருப்பாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

வெளியேற்றம் குறித்த தங்கள் நிலைப்பாட்டை அதிகாரிகள் கடுமையாக்கியதால், குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை நிறுத்தி, காலக்கெடுவிற்கு முன்னர் தங்கள் வீடுகளை காலி செய்வதாகக் கூறினர். வெளியேற்ற வசதியாக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் மீட்டெடுக்கப்பட்டது. குடியிருப்பாளர்களால் பணியமர்த்தப்பட்ட மினி லாரிகள் அன்றைய தினம் வீட்டுப் பாத்திரங்களை கொண்டு செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியே காத்திருந்தன.

இதற்கிடையில், மராடு நகராட்சியின் கூடுதல் பொறுப்பை ஏற்குமாறு முன்னாள் மராடு நகராட்சி செயலாளர் எம். ஆரிஃப் முஹம்மது கானிடம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இடிப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நகராட்சிச் செயலாளராக கோட்டை கொச்சி ஆர்.டி.ஓ ஸ்னேஹில் குமார் சிங்கை அரசாங்கம் நியமித்ததை அடுத்து திரு கான் சனிக்கிழமை பிராவோம் நகராட்சிக்கு மாற்றப்பட்டார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான திரு. சிங், மராடு நகரசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து, உள்ளாட்சி அமைப்பின் வழக்கமான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், இது குடிமை பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com