மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி விமான நிலையத்தில் போதை பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

News image
Updated On :10 மார்ச் 2019, 6:12 am


திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்துவதாக கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.  இதணையடுத்து பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அப்போது மன்னார்குடியை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவர் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மெத்தாகுவாலோன் என்ற போதைப் பொருளை கடத்துவதற்காக, பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், ஆரோக்கிய சாமியை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.