ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நகைப் பறிப்பு முயற்சி: அரிவாளைக் காட்டி தப்பிய கொள்ளையர்கள் (விடியோ)

திருநெல்வேலியில் நகைப்பறிக்க முயன்றபோது அதனை தடுக்க முயன்றவரை அரிவாளால் வெட்டுவது போல் மிரட்டி தப்பிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2020, 8:13 pm IST


திருநெல்வேலி: திருநெல்வேலியில் நகைப் பறிக்க முயன்றபோது அதனைத் தடுக்க முயன்றவரை அரிவாளால் வெட்டுவது போல் மிரட்டி தப்பிய கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி பழையபேட்டை அருகேயுள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் மனைவி செல்வரத்தினம்(57), தனது வீட்டின் வாசலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலமிட தயாரானாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அதில் ஒருவன் மட்டும் இறங்கி செல்வரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றானாம்.

ஆனால், செல்வரத்தினம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதோடு, அவரது மகன் நடராஜன் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாராம். இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து சிறிது தொலைவு தப்பினர். அப்போது துரத்திச் சென்ற நடராஜனை, கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டுவது போல மிரட்டி மோட்டார் சைக்கிளில் தப்பினர். கொள்ளையர்கள் அரிவாளால் வெட்ட முயன்ற காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவானது. அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.