ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுமியை நேரில் சென்று சந்தித்த முதல்வர்

தில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று சந்தித்தார்.

News image
பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுமியை நேரில் சென்று சந்தித்த முதல்வர்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 1:37 pm

DIN

புதுதில்லி: தில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று சந்தித்தார்.  மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தையும் வழங்கினார்.

தில்லி புறநகரான பாசிம் விஹார் பகுதியில் நேற்று (புதன் கிழமை) மர்ம நபர்கள் சிலரால் 12 வயது சிறுமி கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து உயிருக்கு போராடி வரும் சிறுமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  சிறுமியை வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.  காவல்துறை ஆணையரிடம் இது குறித்து பேசியுள்ளேன். குற்றவாளிகளை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

சிறுமி குறித்து அவர் பேசியதாவது, மருத்துவமனையில் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை சிறுமியை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமே சிறுமியின் நிலை குறித்து கூற இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி விரைவில் நலமடைவார் என நம்புவோம் இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.