இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுகவினர் மீது தான் அதிக ஊழல் வழக்குகள் உள்ளன: புள்ளி விவரங்களுடன் அமைச்சர் சி.வி. சண்முகம்

திமுகவினர் மீது தான் அதிக ஊழல் வழக்குகள் உள்ளன என்று புள்ளி விவரங்களுடன் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக கூறினார். 

News image
விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்.
Updated On :23 டிசம்பர் 2020, 7:42 am

DIN


விழுப்புரம்: திமுகவினர் மீது தான் அதிக ஊழல் வழக்குகள் உள்ளன என்று புள்ளி விவரங்களுடன் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக கூறினார். 

விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஆளுநரை சந்தித்து ஒரு உத்தேச புகார்ப் பட்டியலை அதிமுக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுத்துள்ளார்.

இது ஒன்றும் புதிதல்ல, அதிமுக ஆட்சி அமைத்ததிலிருந்து, இதுபோன்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் ஸ்டாலின்.

குறிப்பாக முதல்வர் மீது குறிப்பிட்டுள்ள புகார்களில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விதிமீறி ஒதுக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏற்கனவே அவர்கள் புகார் தெரிவித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவராலும் விசாரிக்கப்பட்டு, அவசர அவசரமாக சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டார்கள்.

இதில் ஒப்பந்தம் எடுத்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காத நிலையில் ஆதாரமின்றி அரசியலுக்காக புகார் கொடுப்பதை தெரிவித்து, உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதுபோலவே அமைச்சர்கள் மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் இருக்கும் பல வழக்குகள், புகாரை மீண்டும் ஆளுநரிடம் மனு அளிக்கும் காரணம் என்ன. நாங்கள் வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியவர், திமுகவினர் மீது தான் அதிக ஊழல் வழக்குகள் உள்ளன என்று புள்ளி விவரங்களுடன் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.