ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கள்ளக்குறிச்சி அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பு: வாந்தி, மயக்கத்தால் பாதித்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பால் வாந்தி, மயக்கத்தால் பாதித்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2020, 3:37 am

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பால் வாந்தி, மயக்கத்தால் பாதித்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள திம்மலை கிராமத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்த 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதில், அதிகம் பாதிக்கப்பட்ட தொழிலாளி கண்ணன்(57), மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.

இதனால் திம்மலை கிராமத்தில் சுகாதார குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.