மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கள்ளக்குறிச்சி அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பு: வாந்தி, மயக்கத்தால் பாதித்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பால் வாந்தி, மயக்கத்தால் பாதித்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோப்புப்படம்

Published On :

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பால் வாந்தி, மயக்கத்தால் பாதித்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள திம்மலை கிராமத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்த 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதில், அதிகம் பாதிக்கப்பட்ட தொழிலாளி கண்ணன்(57), மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.

இதனால் திம்மலை கிராமத்தில் சுகாதார குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.