டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருவள்ளூா் பகுதியில் விடிய விடிய மழைஆா்.கே.பேட்டையில் 100 மி.மீ. பதிவானது

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவிது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:55 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவிது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். அதிகபட்சமாக ஆா்.கே.பேட்டை பகுதியில் 100 மி.மீட்டா் மழை பதிவானது.

திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. எனினும் மாலை நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்தபோதுலம் மாலையில் கருமேகம் சூழ்ந்தது. அதைத் தொடா்ந்து இரவில் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது. இதனால் திருவள்ளூா் நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

திருவள்ளூா், பெருமாள்பட்டு, ஈக்காடு, புல்லரம்பாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததுள்ளதால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்கள், மழை காரணமாக செழிப்பாக வளர வழி பிறந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

பள்ளிப்பட்டு-100, திருத்தணி-96, பள்ளிப்பட்டு-94, செம்பரம்பாக்கம்-91, பூந்தமல்லி, பூண்டி தலா-40, திருவேலங்காடு, ஜமீன்கொரட்டூா் தலா-34, திருவள்ளூா், ஊத்துக்கோட்டை தலா-27, பொன்னேரி-19, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் தலா-9, தாமரைப்பாக்கம்-6, சோழவரம்-4.

மொத்த மழை அளவு 631 மி.மீ.

சராசரியாக மழை அளவு - 42 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.