புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாலாஜாப்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும்  நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது

News image
Updated On :27 ஜூன் 2020, 11:29 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும்  நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்தனர்.

வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவினர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. 

Story image

இதில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த வீடு முழுவதுமாக வெடித்து சிதறியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தமிழன், உழைப்பாளி, விஜய், ஆகிய 3 பேர் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதில் உழைப்பாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். மேலும் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைவர் பூரணி ஆகியோர் விபத்துக்குள்ளான இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.