வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வாலாஜாப்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும்  நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது

News image
Updated On :27 ஜூன் 2020, 4:59 pm IST

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும்  நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்தனர்.

வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவினர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. 

Story image

இதில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த வீடு முழுவதுமாக வெடித்து சிதறியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தமிழன், உழைப்பாளி, விஜய், ஆகிய 3 பேர் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதில் உழைப்பாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். மேலும் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைவர் பூரணி ஆகியோர் விபத்துக்குள்ளான இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.