குஜராத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.
மாநிலத்தில் இவருடன் சேர்த்து கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
பவநகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 45 வயது பெண், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் இறந்தார். இவருக்கு ஏற்கெனவே இரு வாரங்களுக்கு முன் பக்கவாதம் பாதித்திருந்தது.
இதுவரை ஆமதபாத்தில் மூவரும் பவ நகரில் இருவரும் சூரத்தில் ஒருவரும் இறந்தனர்.