தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா தொற்றில்லா மாவட்டமானது நாமக்கல்: ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர் 

நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பினர்.

News image
வழியனுப்பி வைக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்
Updated On :13 மே 2020, 11:50 am

DIN


நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 77 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சேலம், கரூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

14 நாள்கள் தங்கியிருந்த நிலையில் இரு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியானதன் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுப்பப்பட்டு வந்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை வரையில் கரூர், சேலம் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து 15 பேர் சிறப்பு வாகனத்தில் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்,  காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

இதன்மூலம் நாமக்கல் மாவட்டம் தற்போது கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறியது: தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது. இன்னும் 14 நாள்களுக்கு எவ்வித தொற்றும் இல்லாதபட்சத்தில் நாமக்கல் மாவட்டம், சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறுதல் பெறும். பச்சை மண்டலமாக மாறுவதற்கு அதிக நாள்களாகும். அதுவரையில் யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.