சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ்நாடு டூ ஒடிசா: சாலைவழி நடந்துசென்ற தொழிலாளி பலி

தமிழகத்திலிருந்து ஒடிசாவிலுள்ள சொந்த ஊருக்கு சாலை வழியே நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி, கும்மிடிப்பூண்டி அருகே உயிரிழந்தார்.

News image
Updated On :19 மே 2020, 6:08 am

DIN

கும்மிடிப்பூண்டி: தமிழகத்திலிருந்து ஒடிசாவிலுள்ள சொந்த ஊருக்கு சாலை வழியே நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி, கும்மிடிப்பூண்டி அருகே உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டம் லச்சிபேடா அருகே பூபன்பலி பகுதியை சேர்ந்தவர் சாந்திரஞ்சன் பிஸ்வாஸ் மகன் ராம் பிஸ்வாஸ் (44).

தமிழகத்தில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பொது முடக்க ஊரடங்கின் காரணமாக இவர் வேலை செய்த தொழிற்சாலை பூட்டப்பட்டதால் சென்னையைக் கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திரத்தைக் கடந்து ஒடிசாவிற்கு செல்ல இவர் திட்டமிட்டார்.

Story image

தொடர்ந்து சில நாள்கள் நடந்து கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையை அடைந்த நிலையில் கவரப்பேட்டை பஜாரில் ஒரு கடை வாசலில் திங்களன்று இரவு இவர் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இவர் இறந்தநிலையில் கிடப்பதைக் கண்ட தூய்மை பணியாளர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜி. நமச்சிவாயத்திற்கு தகவல் தந்தனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் கவரப்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தொடர்ந்து  ராம் பிஸ்வாஸின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காகக் காவல்துறையினர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

இறந்த ராம் பிஸ்வாஸ் சளித் தொல்லையால் அவதிப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அவர் பல நாள்கள் நடந்து வந்த களைப்பு மற்றும் மூச்சு திணறலால் இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி தடத்தில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், கூட்டம்கூட்டமாக, குடும்பம் குடும்பமாக நடந்தும், சைக்கிளிலும் சென்றுகொண்டிருக்கும் சூழலில் வடமாநில தொழிலாளி ஒருவர் இறந்த இச்சம்பவம் கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.