கரோனா பொது முடக்கம் நடைமுறையிலுள்ள காலத்தில், மே மாதம் முதல் தேதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இதுவரை 21 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.
குஜராத்தில் ஜாம்நகரில் நிறைமாத கர்ப்பிணியாக ரயிலேறிய மமதா, பிகாரில் சப்ரா ரயில் நிலையத்தில் இறங்கும்போது கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையுடன் இறங்கினார்.
ரயில் பெட்டியே மகப்பேறு அறையாக மாற்றப்பட்டுக் குழந்தையும் பெற்றெடுத்தார் மமதா. இந்த தாய் மற்றும் குழந்தைக்கான மருத்துவ கவனிப்புக்காக, இடைநில்லா இந்த சிறப்பு ரயில், ஆக்ரா கோட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர், அதே ரயிலிலேயே மமதா அவருடைய ஊரைச் சென்றடைந்தார்.
மே முதல் நாளிலிருந்து இந்தச் சிறப்பு ரயில்களில் சுமார் 21 குழந்தைகள் பிறந்திருப்பதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
கெடுவினையாக வெவ்வேறு ரயில்களில் இரு குழந்தைகள் மட்டும் இறந்தே பிறந்தன, மற்றொரு பெண் குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளில் தொடர் திருட்டு: 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
மும்பை, புணேவில் வெளியான கருப்பு!
விஜய்யின் ஆட்சியால் சினிமாவில் சுதந்திரம் கிடைக்கும்: பேரரசு நம்பிக்கை

சட்டப்படி நிரூபித்த பிறகே தலைமை அலுவலகத்தில் கால் வைப்போம்: சி.வி. சண்முகம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

