எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்: பழனிவேல் தியாகராஜன் 

தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:55 am


சென்னை: தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

* மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீரமட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 

* 200 குளங்களின் தர உயர்த்த ரூ.11.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

* நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

* ஆனைமலையாறு, நீராறு - நல்லாறு, பாண்டியாறு-புனம்புழா திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். 

* நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்.

* பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.

* அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும். இதற்காக உலக வங்கி உதவி பெறப்படும்.

* பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* காவிரி டெல்டாவில் பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் செயல்படுத்தப்படும்.

* நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்.

* கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம் அமைக்கப்படும். 

* 79,395 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.