மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

'சசிகலா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்'

சசிகலா உடல்நிலை முன்பை விட தற்போது நல்ல நிலையில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News image

சசிகலா (கோப்புப்படம்)

Updated On :27 ஜனவரி 2021, 8:01 am

சசிகலா உடல்நிலை முன்பை விட தற்போது நல்ல நிலையில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு - பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று (ஜன.27) விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சசிகலா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது காவல்துறை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

சிறையில் இருந்த சசிகலா சிறையில் தோட்டக்கலை தொடர்பான பணிகளை மேற்கொண்டார். அதன்மூலம் கிடைத்த வருவாய் மற்றும் விளைபொருள்கள் சிறைக்கே வழங்கப்பட்டுள்ளது.

உடல் நலம் முழுவதும் சரியான பின்பு விரைவில் தமிழக மக்களை சந்திக்கிறேன் என்று சசிகலா மக்களிடம் தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்.

சசிகலாவிற்கு மீண்டும் 30-ம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.