எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கள்ளக்குறிச்சி அருகே அவசர ஊர்தி டயர் வெடித்து விபத்து:  கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிவந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனா்.

News image
சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான அவசர ஊர்தி
Updated On :10 ஜூன் 2021, 3:43 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிவந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனா்.

சேராப்பட்டைச் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி(23). நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக 108 அவரச ஊர்தியில் அழைத்துக்கொண்டு அவரது மாமியார் செல்வி(52), அவரது நாத்தனார் அம்பிகா(32) ஆகிய மூவரும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதன்கிழமை அதிகாலை அழைத்துச் சென்றனர்.

Story image

உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமி

அங்கு அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அவசர ஊர்தியை ஆரூர் குப்பன் என்பவரின் மகன் கலியமூர்த்தி(36) ஓட்டி வந்துள்ளார்.

Story image

உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி

இவருடன் மூங்கில்துறைப்பட்டு திருமலை மகள் உதவியாளர் தேன்மொழி(27), புதுப்பட்டு கிராம ஆஷா செவிலியர் மீனா ஆகியோர் வந்துள்ளனர். அவசர ஊர்தி கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் -  அரிய பெருமானூருக்கு நடுவே உள்ள அய்யனார் கோவில் முன்பு சென்றுகொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

Story image

உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியின் நாத்தனார் அம்பிகா.

இந்த விபத்தில் கர்ப்பிணி பெண்ணின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் போது வழியிலேயே உயிரிழந்தார் என மருத்துவர் தெரிவித்தனர்.

Story image

அவரசர ஊர்தி ஓட்டுநர் கலியமூர்த்தி, அவரது உதவியாளர் தேன்மொழி, செவிலியர் மீனா மூவரும் காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.