ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜூலை 1-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்களுக்கு ஆளுநர் அறிவுரை

ஜூலை 1-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்களுக்கு ஆளுநர் அறிவுரை

News image
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Updated On :19 ஜூன் 2021, 6:57 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார். 

இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது:
புதுச்சேரியில் ஜூன் 16 முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதால், தடுப்பூசி திருவிழா 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனாவில் இருந்து விடுபட்டவர்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது. யோகா கலையை கற்றுக் கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்கலாம்.

கரோனா மூன்றாம் அலை தாக்கம் வரும் என கூறப்படுவதால் மக்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் தற்போது குறைந்து வருகிறது என்று கூறினார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.