புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

தம்மம்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் காயம்

தம்மம்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

News image

108 ஆம்புலன்ஸ்

Updated On :25 ஜூன் 2021, 6:03 am

DIN



தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

தம்மம்பட்டி உடையார்பாளையத்தில் வசிப்பவர் நாகராஜ் (53). பாத்திரம் வியாபாரம் செய்துவருகிறார்.  வெள்ளிக்கிழமை காலை, தனது இருசக்கர வாகனத்தில் மனைவி பிரேமா (45), கர்ப்பிணியான மருமகள் பேபி சாலினி ஆகியோருடன், ஆத்தூரில் இருந்து தம்மம்பட்டிக்கு வந்தார். 

அப்போது, நாகியம்பட்டி சோப்புமண்டி அருகே வந்தபோது, எதிரே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி பேபி சாலினிக்கு, பிரசவ வார்டில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.