கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரம் - வட தமிழக கடற்கரை நோக்கி நகரவுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.