மிசோரம் மாநிலத்தின் சம்பையில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 73 கி.மீ தொலைவில் 53 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.