அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை: மத்திய அரசு தகவல்

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 4177 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image
கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை: மத்திய அரசு தகவல்
Updated On :30 நவம்பர் 2021, 1:46 pm

DIN

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 4177 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நடப்பு நிதியாண்டின் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று குடியுரிமை தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 4177 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு 1106 பேருக்கும். 2017ஆம் ஆண்டு 817 பேருக்கும், 2018ஆம் ஆண்டு 628 பேருக்கும், 2019ஆம் ஆண்டு 987 பேருக்கும், 2020ஆம் ஆண்டு 639 பேருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் 2017ஆம் ஆண்டு 1 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர். இவை முறையே 2018ஆம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 561 பேரும், 2019ஆம் ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரத்து 17 பேரும், 2020ஆம் ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 297 பேரும் தங்களது இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.